Friday, March 10, 2023

அகிலன் திரை விமர்சனம் | Agilan movie review | Tamil movie review | Tamil latest movie review 2023

 


அகிலன் திரைப்பட விமர்சனம் படம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம் ஜெயம் ரவி பிரியா பவானி சங்கர் தான்யா ரவிச்சந்திரன் ,ஹரிஷ் பறையடி சாய்ய் தீனா, குமரவேல், ஆகியோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்,


படத்தின் ஒரு வரி கதை என்னவென்றால் ஜெயம் ரவி துறைமுகத்தின் பெரிய டான் ஆக விரும்புகிறார் அதற்கு உண்டான வேலைகளை வில்லத்தனமாக செய்கிறார் மிகவும் ரசிக்கும்படியான காட்சிகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளது


இரண்டு கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் படத்தில் நிறைய விபரங்கள் கூறப்பட்டுள்ளது


குறிப்பாக படத்தில் நிறைய அரசியல் விஷயங்கள் பேசி இருக்கிறார்கள் மக்களுக்கு தேவையான அரசியல் என்பதால் ரசிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது


கடல் கடலை சார்ந்த மக்கள் மக்களை சார்ந்த கடல், மிக அருமையாக சொல்லி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்


படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை


பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் பெரிய அளவுக்கு இல்லை என்றாலும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை சொதப்பி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.


 காவல்துறை கதாபாத்திரம் பிரியா பவானி சங்கருக்கு பொருத்தமாக இல்லை என்பது பரிதாபமான விஷயம் 


சில காட்சிகளில் தானியா ரவிச்சந்திரன் வந்தாலும் அருமையான நடிப்பு நிச்சயம் அவரை பாராட்டலாம்


அதுபோல சிறு சிறு காட்சிகளே வரும் ஹரிஷ் பறையடி ஹரிஷ் உத்தமன் சாய் தீனா குமரவேல் இவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,,


கடல் வணிகம் கடல் வியாபாரம் கடல் அரசியல் துறைமுகம் துறைமுகம் சார்ந்த அரசியல் துறைமுகத்தில் நடக்கும் கொள்ளைகள் ஊழல்கள் அனைத்துமே இந்த படத்தில் தெள்ளத் தெளிவாக விளக்கி சுட்டிக்காட்டி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்


இதற்கு முன்பு வெளியான பூலோகம் திரைப்படமும் ஜெயம் ரவி கல்யாண கிருஷ்ணன் இணைந்து வெளியான படம் அந்த திரைப்படமும் வியாபார ரீதியில் பெரிதாக போகவில்லை என்றாலும் அந்தப் படத்திலும் குத்து சண்டை சம்பந்தமாகவும் விளம்பரதாரர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஊழல்கள் அனைத்தையும் விவரமாக கூறி இருப்பார்கள் கல்யாணகுமார்


 அதைப்போலவே இந்த அகிலன் படத்திலும் கடல் கடல் வியாபாரம் துறைமுகம் துறைமுகம் சார்ந்த வியாபாரங்கள் அனைத்தையும் தெளிவாக கூறியிருக்கிறார் கடல் சம்பந்தமான துறைமுகம் சம்பந்தமான அனைத்து அரசியலையும் பேசி இருக்கிறார்கள்


படத்தில் எதிர்காலத்தில் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு கல்யாண கிருஷ்ணனுக்கு பெரிய அளவில் பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை


படத்திற்கு இசை சாம் சி எஸ் வழக்கம்போல ஒரே அலறல்  சத்தம் இருந்தாலும் பல காட்சிகளில் வெறுப்படையச் செய்தாலும் சில காட்சிகளில் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார் சாம் சிஎஸ்


படத்தின் எடிட்டிங் ஒலிப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது


 படத்தின் ஒளிப்பதிவை சொல்லலாம் சிறப்பான ஒளிப்பதிவு சிறப்பான எடிட்டிங் அனைத்து விதத்திலும் படம் சிறப்பாக உள்ளது நீங்கள் திரையரங்கில் சென்று கண்டு களிக்கலாம்


மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின் தொடருங்கள்


 காட்டு மல்லி என்ற பாடலை காப்பி அடித்த இளையராஜா 

AK62 அஜித் மகிழ்திருமேனி படத்தில் அப்டேட் கொடுத்த யாரடி நீ மோகினி நாயகி

 துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு ஏ கே 62 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது, ஆனால் இன்றுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்று சுபாஷ் கரன் அறிவித்திருந்தார், படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்க போகிறார் என்பதெல்லாம் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள்,

 இன்றுவரை இந்தப் படத்தின் எந்த தகவலும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து அஜித்திடம் இருந்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி என்பவர் முதன்முறையாக அப்டேட் கொடுத்திருக்கிறார் சைத்ரா ரெட்டி பெங்களூரைச் சேர்ந்த ஒரு தெலுங்கு நடிகை இவர் 1990 இல் பிறந்துள்ளார் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆங்கிலம் என பேசத் தெரிந்த ஒரு நடிகை இந்த சைத்ரா ரெட்டி, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை 2014 இல் ஸ்டார் சொர்ணாவின் வெளியான கன்னட தொடரில் இவர் நடித்திருக்கிறார் அந்த தொடரின் பெயர் மாதேரவாணி என்பது, 2017 ஜி தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் வெள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த சைத்ரா ரெட்டி, இந்த சைத்ரா ரெட்டி சில கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்,விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்று பிரியா பவானி சங்கர் நடித்து வந்த தொடரில் பிரியா பவானி சங்கர் நடிக்க முடியாத நிலை வரும்போது அந்த கதாபாத்திரத்திற்காக இந்த சரித்திராரிட்டி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் ஜீ டிவி நடித்த யாரடி நீ மோகினி என்ற சீரியஸில் வில்லியாக சிறப்பாக நடித்தார் என்பதற்காக 2018 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வெள்ளிக்கான விருதை இரண்டு ஆண்டுகளும் இவரே தட்டிச் சென்றார்

 இவர் இன்று கொடுத்த அப்டேட் என்னவென்றால் ஏ கே படத்தில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தில் தனக்கு மகிழ்ச்சிறுமேனி வாய்ப்பளித்திருக்கிறார் அவருக்கு நன்றி என்று சொல்லி, அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது



 குறிப்பிடத்தக்கது, இந்தப் படத்தின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சினிமா தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின்தொடருங்கள்


Thursday, March 9, 2023

சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் சற்றுமுன் வெளியானது

 இரண்டு மூன்று நாட்களாகவே சிலம்பரசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின அதைத்தொடர்ந்து கமலஹாசன் இந்த படத்தை தயாரிக்கப் போகிறார் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கப் போகிறார்


 சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படமாக அமையும் இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் சிலம்பரசனின் ரசிகர்கள் செய்திகளை பரவ விட்டுக் கொண்டிருந்தனர்


 ஆரம்பத்தில் இவை அனைத்தும் பொய்யான செய்திகள் வதந்தி என்றும் நினைக்கத் தோன்றியது ஆனால் அவைகள் அனைத்தும் உண்மை என்று நேற்று அறிவிக்கப்பட்டது

ஆனால் அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவராமல் இருந்த நிலையில் நேற்று மாலை படத்தின் தகவலை இன்று அறிவிக்கப் போவதாக சொல்லி இருந்தார்கள் அதே போல் இன்று மாலை 5:30 மணி அளவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து 450 கோடி ரூபாய்க்கு மேலும் வசூல் சாதனை படைத்தது



 என்பது நமது அனைவருக்கும் தெரியும் அப்பொழுதே ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது பிக் பாஸில் சிலம்பரசன் கலந்து கொண்டதால் பிக் பாஸில் சிலம்பரசன் கலந்து கொண்டதால் சிலம்பரசனை வைத்து கமலஹாசன் திரைப்படம் தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின அப்போதைக்கு அது வெறும் வதந்தி என்றே பார்க்கப்பட்டது



 இன்று மாலை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தார் இந்த திரைப்படத்தை ஆர் கே எஃப் ஐ தயாரிக்கிறது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக கமலஹாசன் அறிவித்தார், இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் தேசங்கு ராஜாவும் சிலம்பரசனும் இணைந்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது
 இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றெல்லாம் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது காரணம் கமலஹாசனின் தயாரிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் பாடலும் சுமாராக இருந்தது ஆனால் இந்தப் படத்திற்கும் அனிருத் சேமிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது ஆனால் இன்று முழுக்க இந்த வருடத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போகிறார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது அதிகபட்சமாக அனிருத் இசையமைப்பாளர் என தெரிகிறது

 இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது உண்மையான தகவலை இன்னும் கமலஹாசன் சொல்லவில்லை

 மேலும் சினிமா தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தை பின்தொடருங்கள் 



 

ரஜினி,விஜயகாந்த்,சத்யராஜ்,விக்ரம் ஆகியோர்களை வைத்து பிரம்மாண்டமான படம் தயாரித்த படத் தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு உதவுவதாக ரஜினி அறிவிப்பு

 எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான பாண்டியன் திரைப்படத்தை 18 பேர் கொண்ட ஒரு குழு இந்த படத்தை தயாரித்தது இந்தப் படத்தில் ஒரு பங்குதாரரான வி ஏ துரை என்பவர் இந்த படத்தில் பைனான்ஸ் செய்திருந்தார் ஒரு கணிசமான தொகை பங்காக கிடைத்ததால் அதை வைத்து திரைப்படத்தை தயாரிக்கும் தொழிலை தொடங்கினார் தயாரிப்பாளர் வி ஏ துரை,


 அதைத்தொடர்ந்து அவர் கஜேந்திரா,லவ்லி, பிதாமகன் போன்ற திரைப்படங்களை தயாரித்து மிகவும் நஷ்டத்திற்கு உள்ளாகி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சில ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீ ஏ துரை சமீபத்தில் சமூக ஊடகங்களில் தன்னுடைய நிலைமை சரியில்லை என்றும் தனக்கு யாராவது உதவுங்கள் அதாவது திரைத்துறையை சேர்ந்த வசதியான சில பணக்கார தயாரிப்பாளர்களிடம் உதவி கேட்டார்,
 இது குறித்து பேசி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார் வி ஏ துரை 

அந்த வகையில் சில உதவிகளை செய்து இருக்கிறார் சில தயாரிப்பாளர்களும் நடிகர்களும்

ஆனால் மேலும் பணத் தேவை இருப்பதால் ரஜினியிடம் உதவி கேட்டிருக்கிறார் வீ ஏ துரை இதை கேள்விப்பட்ட திரு ரஜினிகாந்த் தான் ஜெயிலர் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுடைய மருத்துவ செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார், அதோடு நில்லாமல் தொலைபேசி மூலம் வி.ஏ துறையை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

ரசிகர்களை மிரட்டிய இளையராஜா விடுதலை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த கலவரம்

 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் விடுதலை பாகம் ஒன்று இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,




விஜய் சேதுபதி நடிக்கும் இந்த கதாபாத்திரத்தை முதலில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் இந்தத் திரைப்படத்திலிருந்து பாரதிராஜா விலகினார் அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார், இந்த காரணங்களுக்காக விடுதலை படத்தில் இருந்து விலகினார் பாரதிராஜா என்று தகவல்கள் சொல்லப்பட்டது, ஜெயமோகனின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் வெற்றிமாறன், ஆடுகளம் கொடி வடசென்னை அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு ஆர் வேல்ராஜ், இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் ரசிகர்கள் கூச்சலிட்டதால் கடுப்பான இளையராஜா இளையராஜா, நீங்கள் அமைதி காக்க வில்லை என்றால் நான் மைக்கை வைத்துவிட்டு வெளியே சென்று விடுவேன் என்று மிகவும் கோபமாக கத்தினார், படக்குழுவை சார்ந்தவர்களும் வெற்றிமாறனும் ரசிகர்களை கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பிறகே இளையராஜாவின் ரசிகர்கள் அமைதி ஆனார்கள், இளையராஜாவின் பேச்சைக் கேட்டு சந்தோஷத்தில் ரசிகர்கள் கையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள், ஆனால் அதை கூச்சலாக நினைத்து கோபப்பட்ட இளையராஜா மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் ஒருவழியாக ஆடியோ வெளியிட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகின படத்தின் டிரைலரும் வெளியானது 

Monday, March 6, 2023

உடல்நலம் சரியில்லை என சொல்லி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட சிவாங்கி





 விஜய் டிவியின் புகழ் சிவாங்கி உங்கள் அனைவருக்கும் தெரியும் மிகவும் குறும்பான ஒரு பெண் லொட லொடா என்று பேசிக் கொண்டிருக்கும் ஓர் அழகான பெண் சிவாங்கி இவர் சிறந்த பாடகியும் கூட சமீப காலங்களில் நிறைய தமிழ் படங்களில் சிறுசிறு காட்சிகளில் நடித்து ரசிகர்களை தொல்லை செய்து வந்தவர் இந்த சிவாங்கி இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அனைத்து

 உலகம் முழுவதிலும் இந்த சிவாங்கிக்கு மிகப்பெரிய ஃபேன்ஸ் ஆர்மி உண்டு



 கண்டஸ்டன்டுகளையும் கலைத்துக் கொண்டே இருப்பார் இவரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் சமீபத்தில் இவருக்கு உடல்நிலை சரியில்லை என ட்ரீட் செய்து


 ரசிகர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார் பல ரசிகர்கள் உடல்நிலை சரியாகி திரும்ப வர வேண்டும் என்று வாழ்த்து சொன்னாலும் நிறைய ரசிகர்கள் இவரை கலாய்த்த வண்ணம் சிவாங்கியை அழ வைத்துவிட்டார்கள் பாவம் சிவாங்கி தெரியாமல் ட்ரீட் போட்டு விட்டோம் என வருந்தும் அளவிற்கு வச்சு செய்து விட்டார்கள் நெட்டிசன்கள்

இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜய் இணையும் புதிய திரைப்படம்

 சென்ற ஆண்டு சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா புதியதாக தொடங்கிய திரைப்படத்திற்கு வணங்கான் என்று பெயரிட்டார்கள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கன்னியாகுமரி நாகர்கோயில் போன்ற பகுதிகளில் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்துமே முடிந்த பிறகும் ஒரு சில காட்சிகளுக்காக மீண்டும் கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது இந்த சூழ்நிலையில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் பிரச்சனை தொடங்கியுள்ளது நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்கள் பேசிக் கொண்டார்கள் இதைத் தொடர்ந்து சூட்டிங் நிறுத்தப்பட்டது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு படப்பிடிப்பு தொடங்கியது ஆனால் படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லை என்று படப்பிடிப்பு குழுவில் இருந்து செய்திகள் வெளியாகிறது அதைத்தொடர்ந்து திடீரென ஒரு நாள் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் சூர்யா பாலாவிற்கும் சண்டை என்றும் செய்திகள் வெளியாகின ஒரு சந்தர்ப்பத்தில் அது உண்மை என தெரிய வந்தது அதைத்தொடர்ந்து சூர்யா சமூக வலைதளங்களில் எனக்கும் வணங்கான் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை நான் இந்த படப்பிடிப்பில் இனி கலந்து கொள்ளப் போவதில்லை இந்த படப்பிடிப்பை நிறுத்திக் கொள்கிறோம், என்று பகிரங்கமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாலாவும் சூர்யாவை வைத்து இனி இந்த படம் தொடர் படம் தொடரப் போவதில்லை வேறு ஒரு நடிகரை வைத்து இந்த படத்தை தொடர போகிறேன் என்று பத்திரிகைகளில் செய்தி அளித்தார்  தொடங்கியது பிறகு சில மாதங்களுக்குப் பிறகு இன்று இந்த படத்தில் அருண் விஜய் ரோஷினி பிரகாஷ் நடிக்கப் போவதாக பாலா அறிவித்துள்ளார் படத்தின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை வணங்கான் என்ற பெயரிலேயே பாலா இந்தப் படத்தை தொடர்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


 

Friday, March 3, 2023

பத்து தல படத்தின் டீசர் இன்று வெளியானது

 


சிவராஜ் குமார் நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் மப்டி இந்தப் படத்தின் தமிழ் ஞானவேல் ராஜா வாங்கி இருந்தார் அதைத்தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணாவை வைத்து சிலம்பரசனை ஹீரோவாக புக் செய்து 10 தல என்ற பெயரில் இந்தப் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார்கள் பல சிக்கலில் பல பிரச்சனைகளில் இந்த திரைப்படம் நின்று போய் சிறிது சிறிதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் மாநாடு திரைப்படம் வெளியான பிறகு இந்த படத்தின் மீது கவனம் செலுத்தினார் 10 தல சிலம்பரசன் ஆனாலும் இந்த படம் முடியவில்லை வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியான பிறகு முழு கவனத்துடன் இந்த 10 தல படத்தை நடித்துக் கொடுத்தார் சிலம்பரசன் மார்ச் மாதம் 30ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியே வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் இந்தப் படத்தில் டிஜே கலையரசன் பிரியா பவானி சங்கர் ரெடின் கிங்ஸ் லீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள் இந்தத் திரைப்படத்தை கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்தப் படத்தின் ஆடியோ ஃபங்ஷனை வரும் 18ஆம் தேதி அதாவது 2023 மார்ச் 18 ஆம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஏற்கனவே அறிவித்து விட்டார்கள் 2023 மார்ச் 30ஆம் தேதி, இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை இன்று அதாவது மார்ச் மூன்றாம் தேதி இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலாய் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

Thursday, March 2, 2023

Rajinikanth next movie announcement | ரஜினிகாந்த் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகி உள்ளது

சன் டிவியின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கலாநிதி மாறன் தயாரித்துக் கொண்டிருக்கும்  தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் என்ற


 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் இதன் படப்பிடிப்பு மைசூர் மங்களூர் என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது இவர்களின் தயாரிப்பில் மேலும் ரஜினிகாந்த் ஒரு திரைப்படம் நடிப்பதாக சமீபத்தில் கையெழுத்தானது ஒரு திரைப்படம் லால் சலாம் என்றும் இன்னொரு திரைப்படம் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் என்றும் பேசப்பட்டிருந்தது இந்த சிபி சக்கரவர்த்தி டான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இவருடைய இயக்கத்தில் நடிப்பதாக இருந்த திரைப்படம் கேன்சல் ஆனது அதைத் தொடர்ந்து ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் என்பவரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்த படம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது அது அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாமல் இருந்ததால் அதைப் பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இன்று காலை லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் திரு சுபாஸ்கரன் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது திரைப்படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் இந்தத் திரைப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இந்தத் திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு வெளியாகிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சுபாஷ் கரன் தெரிவித்திருக்கிறார்




Wednesday, March 1, 2023

அரண்மனை பாகம் 4 கதாநாயகன் அறிவிப்பு Aranmanai chapter 4 Hero introduction




அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தால் இந்தப் படத்தின் முதல் பாகத்தில் வினை ஹன்சிகா சந்தானம் சுந்தர் சி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில வருடங்களிலேயே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் சுந்தர் சி இந்தப் படத்தில் மீண்டும் ஹன்சிகா சித்தார்த் ஆண்ட்ரியா திரிசா எனத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் கதாநாயகிகள் இவருடைய படத்தில் நடித்தார்கள்



 இடைத்தொடர்ந்து மூன்றாம் பாகமும் வெளியானது அந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் ஆண்ட்ரியா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள் இந்தப் படம் சரியாக போகவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் இந்தத் திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவி வெளியிட்டார்கள் அவனி சினி மேக்ஸ் உடன் தயாரித்திருந்தார்கள் இந்தப் படத்தில் நான்காம் பாகம் பெரிய பரபரப்பில் உருவாகி போகும் என சுந்தர் சி சில மாதங்களுக்கு முன்பு


 அறிவித்தார் சமீபமாக அரண்மனை நான்காம் படத்தின் தகவல்கள் சில நாட்களாக வெளியாகி வருகிறது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் 25 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் வேண்டாம் என தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன் மருத்துதாகவும் படத்தை விட்டு விஜய் சேதுபதி விலகியதாகவும் தகவல்கள் வெளியான படி இருக்கிறது இந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் கதாநாயகன் நான்தான் என சுந்தர் சி தற்போது அறிவித்துள்ளார் இந்தப் படத்தில் ஏற்கனவே அரண்மனை சரிசில் நடித்தவர்கள் ஆன ஹன்சிகா திரிஷா அண்ட்ரியா போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகிறது இறுதியாக வெளிவந்த பாகம் மூன்றில் நடித்த ராசி கண்ணா, நான்காம் பாகத்திலும் இருப்பார் என சொல்லப்படுகிறது அதைத்தவிர திரிஷாவும் இந்த படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் 90% செய்திகள் வெளியாகிவிட்டது தற்பொழுது யார் கதாநாயகன் யார் கதாநாயகி யார் இசையமைப்பாளர் யார் ஒளிப்பதிவாளர் என்பது பற்றிய தகவல்கள் மட்டுமே வெளியே வர வேண்டி உள்ளது அதுவும் அடுத்த மார்ச் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே சொல்லப்படுகிறது விரைவில் இந்தப் படத்தின் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்தை தொடருங்கள் 

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியானது

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து அவர் ...